தனியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமை அவசியம்-ரொஷான் குணவர்தன

னியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அன்றாடம் இடம்பெறுகின்ற பஸ் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகைய மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

GPS ‍ எனும் நவீன கருவி மூலம் வாகனங்களின் வேகம் ஆணைக்குழுவினால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று சுமார் மூவாயிரத்து 200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், 678 பஸ்களில் மாத்திரம் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ஆயிரம் பஸ்களில் GPS கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கள் ஏற்படுவதையும், மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதும் இந்த கருவிகள் பொருத்தப்படுவதற்கான முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :