தனியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அன்றாடம் இடம்பெறுகின்ற பஸ் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகைய மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
GPS எனும் நவீன கருவி மூலம் வாகனங்களின் வேகம் ஆணைக்குழுவினால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று சுமார் மூவாயிரத்து 200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், 678 பஸ்களில் மாத்திரம் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ஆயிரம் பஸ்களில் GPS கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கள் ஏற்படுவதையும், மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதும் இந்த கருவிகள் பொருத்தப்படுவதற்கான முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என
.jpg)
0 comments :
Post a Comment