விமானத்தில் பயணி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அவசர தரையிறக்கம்.


மெரிக்காவில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட விமானம், பயணி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.

யுஎ 851 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று,புதன்கிழமை அன்று, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு புறப்பட்டது. 

விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததைக் கண்ட பணிப்பெண்கள் கதவைத் தட்டியுள்ளனர்.

வெளியே வர மறுத்த அந்தப் பயணி, அறைக்குள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் விமானத்தை அலாஸ்காவில் உடனடியாகத் தரையிறக்க நேரிட்டது. விமானம் தரையிறங்கியவுடன், அந்தப் பயணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.மற்ற பயணிகள் அனைவரும் அன்று இரவு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் வியாழன் அன்று, அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. 

மற்றபடி, அவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. பயணிகளில் சிலர், இணையதளத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆசிய நாட்டுப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். மருத்துவ உதவி தேவைப்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :