40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிராகரித்துள்ளது.


கேள்வி மனு கோரல் மூலமே குறித்த டீசல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பெற்றோலிய வள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் குறித்த டீசலில் காணப்படும் உள்ளடக்கங்கள் சில நாட்டிற்கு பொருத்தமற்றவை என்பது ஆய்வு கூடத்தில் உறுதிசெய்யப்பட்டமையினால் குறித்த டீசல் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

குறித்த நிறுவனத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொருத்தமான உள்ளடக்கங்களைக் கொண்ட டீசல் தொகையை மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :