20 வாரங்களுக்கு பிறகு, கருச்சிதைவு செய்ய தடை விதிக்கும் மசோதா அமெரிக்காவில்.


மெரிக்காவில், 20 வாரங்களுக்கு பிறகு, கருச்சிதைவு செய்ய தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு பாராளுமன்றில் நிறைவேறியது.

கருச்சிதைவு செய்யும் நடைமுறைக்கு, பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு உள்ளது.

இதற்கிடையே, ஐந்து மாத கருவை கலைப்பதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, அமெரிக்க பாராளுமன்றில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டின், பிரதிநிதிகள் சபையில், நேற்று முன்தினம், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

எதிர்கட்சியான, குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள, பிரதிநிதிகள் சபையில், இந்த சட்ட மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்ற, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண்களின் சுகாதார விஷயத்தில், குடியரசு கட்சி உறுப்பினர்கள், தங்கள் தீவிர சித்தாந்த கொள்கையை கடைபிடிப்பதாக, ஜனநாயக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

உறுப்பினர்களை சமாதானப்படுத்திய பிரதிநிதிகள் சபை தலைவர் எரிக் கேன்டர் குறிப்பிடுகையில், "முதிர்ந்த கருவை சிதைப்பதால் பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இதை தடுக்கவே, இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் குழந்தையும், வலியை உணரக் கூடியது என்பதால் தான், 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை, சிதைக்கும் சட்டம் நிறைவேற்றப்படுகிறது,´´ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :