அநுராதபுரம் மாவட்டத்தின் 13 பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்.


திர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அநுராதபுரம் மாவட்டத்தின் 13 பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு வடமத்திய மாகாண சபை தீர்மானித்துள்ளது.

அநுராதபுரம் மற்றும் கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் N.W.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு வருகை தரும் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக குறித்த பாடசாலைகள் மூடப்படுவதாக அவர் கூறினார்.

பாடசாலை மூடப்படும் நாட்களுக்குப் பதிலாக வேறு தினங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :