அரசிலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுக்கு கிடையாது-SLMC


ரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுக்கு கிடையாது ஆனால் அரசாங்கத்துடனான சில உடன்பாடின்மை தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்   என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று நடைபெறுகிறது. இதனை மேற்கொள் காட்டி சில ஊடகங்கள் நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லவுள்ளதாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பிரசுரமாகின.

சில ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவியை விட்டு விலகப் போவதாக ஆசிரிய தலையங்கங்கள் எழுதியுள்ளனர். எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அது தொடர்பிலான விமர்சனங்களை தொடர்ந்தும் முன்வைப்பேன். இதன் மூலம் அரசாங்கத்தை விட்டு விலகி விடுவோம் என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :