ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது.

ண்டாரகம பகுதியில் 6 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட வைத்திய பரிசோதனைக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 2 இளம் வயதினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

17 மற்றும் 13 வயதுடைய இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த துஷ்பிரயோக சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :