வட மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை- ராஜித


ட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

'வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகின்றனர். மாகாண சபையால் பொலிஸார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. 

பொலிஸார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. அது மாத்திரமின்றி மாகாண சபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அழிப்பதற்கு முற்படுகின்றனர்,என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :