அம்பாறை கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை பிரதேச அணியினர் சம்பியனாக தெரிவு.

(கல்முனை நிருபர்) 

ம்பாறை மாவட்ட மட்ட கால்பந்தாட்ட சுற்றுத்தொடரை கல்முனை பிரதேச
கால்ப்பந்தாட்ட அணியினர் கைப்பற்றி மாவட்ட மட்ட சம்பியனாக தெரிவாகினர்.

13 பிரதேச மட்ட கால்ப்பந்தாட்ட அணியினர் பங்குபற்றிய அம்பாறை மாவட்ட மட்ட
கால்ப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய
விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் கல்முனைப் பிரதேச செயலக அணியுடன் அட்டாளைச்சேனை பிரதேச
செயலக அணியினர் போட்டியிட்டு,  4:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கல்முனை
பிரதேச செயலக அணியினர் வெற்றிபெற்றனர்.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேனவின் தலைமையில்
இடம்பெற்ற இந்த இறுதி போட்டிக்கு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர்
எம்.எம்.நௌபல், மாவட்ட உதைப்பந்தாட்ட பயிற்றுனர் எம்.ஐ.எம்.அமீர்அலி
உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், என
பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -