முன்னாள் பிரதமரின் மகன் அலி ஹைதர் விரைவில் மீட்கப்படுவார்.


பாகிஸ்தான் தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த 9ம் திகதி பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத சிலர், அலி ஹைதரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அவரது செயலாளர் மற்றும் பாதுகாவலரை கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 

தனது மகனை மீட்டுத் தருமாறு யூசுப் ராஜா கிலானி பாகிஸ்தான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் நேற்று நவ்ஷேரா மாவட்டத்தில் 6ஆப்கன் தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த கும்பலின் தலைவன் பதுங்கி இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைத்தது.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்-பக்துங்க்வா மாகாணத்தின் மர்டான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வசீர் குல் என்ற தீவிரவாதியை இன்று பொலிசார் கைது செய்தனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த வசீர் குல் மீது பாகிஸ்தானில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று 6 தீவிரவாதிகளை கைது செய்த பொலிசார், அவர்கள் கடத்தி வைத்திருந்த அப்துல் வஹாப் என்பவரை விடுவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் வருவதற்கு சில மணி நேரம் முன்னதாக தன்னுடன் கைதியாக வைக்கப்பட்டிருந்த அலி ஹைதர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக அப்துல் வஹாப் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், இன்று பிடிபட்டிருக்கும் வசீர் குல்லிடம் பொலிசார் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமரின் மகன் அலி ஹைதர் விரைவில் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை பாகிஸ்தான் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :