தீப் பந்தங்களுடன் சபை அமர்வுக்கு சென்ற கண்டி மாநகர சபை உறுப்பினர்கள்.


ண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று மாதாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தீப்பந்தங்களை ஏந்தியவாறு மாநகர சபை வளாகத்திற்குள் பிரவேசித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி அலுவலகத்திலிருந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறும், கறுப்பு நிற பட்டியை அணிந்தவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் மாநகர சபை உறுப்பினர்கள் பேரணியாக மாநகர சபைக்கு வருகை தந்தனர்.
மாநகர சபை வளாகத்திற்குள் பிரவேசித்த உறுப்பினர்கள், மாநகர சபை மண்டபத்தினுள் மெழுகுவர்த்தியை கொழுத்தியவாறு சென்றுள்ளனர். இவர்கள் மாநகர சபைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் மாதாந்த கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில் கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :