திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி ஒன்று பிரதேச மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இதில் அந்நிலையத்தின் முகாமையாளர் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பொலிசாரால் அங்கிருந்த இரண்டு யுவதிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் போது அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உப்புவெளி பொலிசார் இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இப்பிரதேசத்தில் புதிதாக பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இவற்றில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் பெருமளவில் தங்கி வருகின்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



0 comments :
Post a Comment