பொதுபல சேனாவைக் கண்டித்து பெளத்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்.



பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்து அதன் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளதுர். பெளத்தத்தை பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில் அதன் செயற்பாடுகளைக் கண்டித்து பெளத்தர்கள் உள்ளிட் சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஒன்றுசேர்ந்தவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த, கிறிஸ்தவ முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் பொதுபல அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உடனேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் பொதுபல அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உடனேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். இதலான் அங்குள்ளவர்கள் நலாதிசைகளிலும் சிதறுண்டு ஓடியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :