றியாஸ் ஆதம்அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குற்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் (2013.04.20) ஆம் திகதி சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் எம் நஸீர் கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ அன்சீல் விசேட அதிதியாகவும், அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என். மதிவன்னன் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச் விமலசேன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment