அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு முன்னால் இன்று பெற்றோர்கள் குவிந்தனர்.


இன்று காலையில் பரபரப்பான ஒரு சூழல் அம்பாரை மாவட்டத்தில் அனைத்து பிரதேச மூலைகள் எல்லாம் பரந்தது,  அம்பாரையில் நடைபெறும் (தெயட்ட கிருள) தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப்பார்வையிட முஸ்லிம் பாடசாலைகளின் மாணவ மாணவியரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று இராணுவத்தினர் பஸ்களுடன் வந்துள்ளதாகவும் உங்கள் பிள்ளைகளை நீங்கள் அவசரமாகச் சென்று கைப்பற்றி விடுங்கள் என்றும் வந்த அந்த தகவலினால் ஊரே திரண்டு பாடசலைகளில் உள்ள தங்களின் பிள்ளைகளைக் காப்பற்றவேண்டும் என்று வேலைகளை எல்லாம் செய்த அதே பாணியில் தாய்மார், உறவினர்கள் அனைவரும் பாடசாலையை நோக்கி படையெடுத்தனர்.

 பாடசாலை நிருவாகத்தினரிடம் தங்கள் பிள்ளைகளை உடனே எங்களிடம் தாருங்கள் நாங்கள் எங்கும் அனுப்ப விரும்பவில்லை என்று  சிலர் சண்டையிட்டு தங்களின் பிள்ளைகளைக் கூட்டிச்சென்றனர். 

ஆனால் குறிப்பிட்ட சம்மவம் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு எந்த விடையமும் தெரியாது என்றும் இது பொய்யான வதந்தி என்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர்கள் அறிவித்தனர். 

மேலும் இராணுவத்தினரிடம் கேட்ட போது அப்படி எதுவும் நடக்க வில்லை என்று கூறினர் ஆனால் இன்று நடைபெற்ற இந்த விடையம் முற்றிலும் மக்களைக் குழப்ப இடம்பெற்ற செய்திகள் என்று மேலதிகாரிகள் கருத்துக்கூறினர்.

 இம்போட் மிரர் இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த இராணுவ உத்தியோகத்தர் குறிப்பிடுகையில் குறிப்பிடப்பட்ட சம்பவம் முற்றிலும் பொய்யானவை அது பற்றி மக்களுக்கு தெரிவு படுத்துங்கள் என்றும் கூறினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :