Share on
குளியாபிட்டி - சேனாதிகம - தண்டுகமுவ பிரதேச வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் தாய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
இத்தீ விபத்து இன்று (01) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 37 வயதுடைய ஜவனா குமாரி (தாய்) மற்றும் 8 வயதுடைய நெத்மி மலீசா (மகள்) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ ஏற்பட்ட வேளை குறித்த வீட்டில் தந்தையும் 1 வருடம் 10 மாதம் நிறைந்த குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
நுளம்பும் தொல்லையை கட்டுப்படுத்த வீட்டுக்குள் இரவில் கொளுத்திவைத்த நுளம்புச் சுருள் தீ பரவக் காரணம் என தெரியவந்துள்ளது.

0 comments :
Post a Comment