Share on
சுமார் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்ட கல்முனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கத் தயாராகவிருந்த குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனை
சுமார் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்ட கல்முனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கத் தயாராகவிருந்த குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனை
யிட்ட போதே காலணிகளுக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 61500 சவூதி ரியால்களும் 7000 கட்டார் ரியால்களும் 7100 டுபாய் திர்ஹம்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இக் குற்றத்திற்காக இவருக்கு 1 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாகவும் நேற்றைய தினமே அவர் குறித்த தண்டப் பணத்தைச் செலுத்திவிட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
0 comments :
Post a Comment