மேலதிக 4 வாக்குகளால் விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்

Share on
கிழக்கு மாகாணசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாணசசையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று சபைத் தவிசாளர் டப்ளியு.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமானது,  

இதன்போது, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்களை சபையில் சமர்ப்பித்து, துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உரையாற்றினார். இதனையடுத்து குழு நிலை விவாதம் ஆரம்பமானது. 

பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்ற மேற்படி குழுநிலை விவாதம் பிற்பகல் 2.00 மணிவரை நீண்டு சென்றது. 

இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்த அதேவேளை, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். 

இதன்படி, மேற்படி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :