ஜப்பான் பாரளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் தேர்தல்

Share on
ஜப்பான் நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது.அணு சக்தி நிலையங்களை மூடுதல், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இதனால், ஆளும் கூட்டணியிலும் பிரச்சினை ஏற்பட
்டது. இதுவரை ஆறு பிரதமர்கள் மாற்றப்பட்டு விட்டனர். சமீப காலமாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே தீவு தொடர்பாக பகைமை வளர்ந்து வருகிறது.

இவ்விடயத்தில் உரிய தீர்வு காணாதது குறித்தும் பொருளாதார மேம்பாட்டுக்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது குறித்தும், ஆளும் கட்சி மீது புகார் கூறப்பட்டது.

நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து வந்ததால், ஜப்பான் பிரதமர் யோஷி ஹிகோ நோடா பார்லிமென்ட்டை கலைக்கப்போவதாக எச்சரித்தார்.

இதன் படி, நேற்று பாராளுமன்றத்தில் கீழ்சபை கலைக்கப்பட்டது. அடுத்த மாதம் 16ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :