ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக 22 பேர் சத்தியப்பிரமாணம்

Share on


தமிழர் ஒருவர் உட்பட 22 வழக்குரைஞர்கள் ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல் முறையீட்டு நீதிபதிகள், மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டவுரைஞர்கள் ஒரு தடவையில்  கூடுதலாக  நியமிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என்பதனால் இது இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாக அமைகின்றது.

இந்த 22 புதிய சட்டவுரைஞர்களுக்கு மேலாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இந்த வருடம் மார்ச் மாதத்திலும் இந்திர சேனரத்ன சமரசிங்க மற்றும் சட்டக்கல்லூரி அதிபர் டபிள்யூ.டி.றொட்றிகோ ஆகியோர் செப்டெம்பரிலும் ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக பதவியேற்றுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.

வழக்குரைஞர் முருகேசு சிற்றம்பலம் உட்பட 22 சட்டவுரைஞர்களே ஜனாதிபதி சட்டவுரைஞர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

thanks tamilmirror
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :