வினாத்தாள்கள் அச்சிட உதவியவர்களுக்கு நன்றி தெரிவிப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் (11) நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கான வலய மட்ட நிலையறி மதிப்பீடு பரீட்சை சிறப்பாக நடைபெற வினாத்தாள்களை அச்சிட உதவியவர்களுக்கு கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவரும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி எமது வேண்டுகோளை ஏற்று வினாத்தாள்களை அச்சிட நிதியுதவி புரிந்த எம்.சம்சுதீன் ஹாஜி, பசீர் அஹமட் ரிஸ்வி மற்றும் பண உதவியை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்த கோட்டக் கல்வி அலுவலக முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எஸ்.நௌபர் ஆகியோருக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :