இறக்காமத்தில் முயற்சியாண்மை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை !



நூருல் ஹுதா உமர்-
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக முயற்சியாண்மை அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக கடன் உதவிகள் வழங்குவதற்கான சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யவதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வியாழக் கிழமை இறக்காமம் பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி வேரகொட ஆகியோர் முன்னிலையில் நேர்முகப் பரீட்சை இறக்காமம் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி பெறும் பயனாளிகளின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சௌபாகியா திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்த கடன் உதவிகள் தற்போது வழங்கிவருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :