கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி- தீயிலும் சாகாத கொரோனா!


J.f.காமிலா பேகம்-

தீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது.

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில், தீயில் கருகி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரது உடல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

காலி, ஹப்புகல – பொரலியதொலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது பெண், நீண்டகாலமாக விசேட தேவையுடையவராக இருந்து வந்தவர்.

தனது வீட்டின் அறையில் புகை எழும்புவதை அவதானித்த குறித்த வயோதிபப் பெண், சக்கரநாட்காலியின் உதவியில் அதனை பார்க்கச் சென்றபோது தீயில் கருகியுள்ளார்.

அதன் பின் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

குறித்த பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :