சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான
எஸ்.எம்.றிஹான் கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
5 வது இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர், நேற்று முன்தினம் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 23 இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்களும், 23 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அணைத்து இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment