காரைதீவு சகா-
கொரோனா நெருக்கடியின் பின்னர் மக்கள் வங்கி முதல்முறையாக அஸ்வெனா திட்டத்தின்கீழ் கடன் வழங்கும் முதல் நிகழ்வு இன்று(24)புதன்கிழமை நடைபெற்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை மீளவம் கட்டியெழுப்புமுகமாக இக்கடன் வழங்கப்படுகிறது.
காரைதீவு கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை மக்கள்வங்கிக்கிளைகளில் இக்கடன்வழங்கும் நிகழ்வ நடைபெற்றது.
மக்கள்வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் கபில திசாநாயக்க மற்றும் விடயப்பொறுப்பு வங்கி அதிகாரி எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
இன்று (24)காரைதீவு மக்கள்வங்கிக்கிளையில் கிளை முகாமையாளர் திருநாவுக்கரசு உமாசங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலாவது 5லட்சருபா கடனுக்கான காசோலையை பிராந்திய முகாமையாளர் கபில திசாநாயக்க வாடிக்கையாளர் ஆர்.திருநாவுக்கரசுக்கு வழங்கிவைத்தார்.
அதன்போது வங்கி உத்தியோகத்தர்களும் சமுகமளித்திருந்தனர்.