வரலாற்றில் தடம்பதித்த சாய்ந்தமருதுக்கு பல்வேறு வரலாறுகள் அந்தவகையில் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் குடாக்கரை கிழல் கண்ட விவசாயிகளின் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’வரலாற்று நூலின் வெளியீட்டு விழா (01) ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் பாரியார் பாத்திமா காஸீம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதேவேளை நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான அறிமுக உரையை ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர் முகம்மட் வழங்கினார்.
சாய்ந்தமருது விவசாய சேவைகள் குழுவின் தவிசாளர் எம்.எம்.எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா,கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம், கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், ஆகியோர் கௌரவ அதிதிகளாக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சம்சுதீன், அம்பாறை மாவட்ட முன்னாள் விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர். அப்துல் லத்தீப், ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் எம்.எம். காஸிம் அவர்களை கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
குடாக்கரை கிழல் கண்ட விவசாயிகள் அமைப்பு மற்றும் எம்.எம். காஸிம் வெளியீட்டம் ஆகியன ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் நூலாசிரியர் எம்.எம். காஸிம் அவர்களது குடும்ப உறவினர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.