முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்தைக் கண்டிக்கிறேன். -பிரதமர் ரணில்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கடந்த வெள்ளிக்கிழமை தனது உரையில் கூறியுள்ள கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பு அலரிமாளிகையில் இன்று (11) நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதனைக் கூறியுள்ளார்.

அவர் அவ்வாறான அறிவிப்பு குறித்து இதுவரையில் எந்தவித மறுப்பையும் வெளியிடாதுள்ளதாகவும் பிரதமர் விசனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவராயின், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை விளங்கிக் கொண்டு பெரும்பான்மை யார்? சிறுபான்மை யார்? என்பதை விளங்கி, சகலருடனும் இணைந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே முன்வரவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தாலும், சர்வதேச ரீதியில் பெரும்பான்மையினர் எனவும், இதனால், யாருடையவும் அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்கள் கீழ்படிய மாட்டார்கள் எனவும் கிழக்கு ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை தனதுரையில் கூறியிருந்தார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -