திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகள் குச்சவெளி பிரதேச தனியான கல்வி வலையம் தொடர்பாக ஆவணம் கிழக்கு ஆளுனரிடம் கையளிப்பு

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ராஜாங்கக சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஆர்.எம்.அன்வர் (17) வியாழன் கிழக்கு மாகாண ஆளுனர் கெளரவ கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆளுனர் செயலகத்தில் சந்தித்து காணி பிரச்சினைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தை கூறியதுடன் புல்மோட்டை காணி மற்றும் திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் உள்ளடங்கிய ஆவணங்க ள் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலையம் தொடர்பாகவும் கடிதமொன்றை கையளித்தார்

மேலும் ஆளுனர் அவர்கள் எதிர் வரும் ஒரு சில தினங்களில் முப்படைகளின் தளபதி கிழக்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர்கள்,காணி ஆணையாளர் பிரதேச செயலாளர்கள் மூன்று மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களையும் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை தான் அனுப்பி வைப்பதாகவும் கிழக்கிலுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாக தான் கூடிய கவனம் செலுத்தி தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார்

தான் இன மொழி மத பேதத்திற்கு அப்பால் அணைத்து இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க தாம் உறுதி பூண்டுள்ளதாக ஆளுனர் கூறியதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -