துப்பாக்கி சூட்டில் பலியான சித்தி நசீமா பற்றி....!

கொழும்பு புளுமெண்டல் வீதியில் இன்று(31) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த சித்தி நசீமா பரிதாபமாக உயிரிழந்தார். 43 வயதான சித்தி நசீமாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகளும் உள்ளன.

முஹமட் சபீர் (வயது 17)
பாத்திமா சபீனா (வயது 13)
பாத்திமா சபிய்யா (வயது 6)
இருப்பதற்கு சரியான வசதியோ வீடோ இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலை செய்யும் தனது கணவனின் வருமானத்தை கொண்டே இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில்தான் இன்றைய திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது.

தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்தார். இன்று காலை கொழும்பு புளுமெண்டல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென வந்த ஆயுதாரிகள் நால்வர் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர்களை நோக்கி தாறுமாறாக சுட்டனர்.

அந்த வேளையில் அங்கு நின்ற சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி அவருக்கு சுவர்க்கம் கிடைக்க நாமும் பிரார்த்திப்போம் ஆமீன் )



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -