எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு அஞ்சுவதென்றால் வீட்டோடு இருக்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் ராஜபக்ஷ ஆட்சியை தோல்வியடையச் செய்ததாகவும், இம்முறை பொது தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை குழி தோண்டி புதைக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.