முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் ஏன் ஒத்திவைக்கப்பட்டது? ஹஸன் அலி எம்.பி யிடம் சில கேள்விகள்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிகளுடனா சந்திப்பு இன்று(14) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. இது தொடர்பாக பிரபல ஊடகவியலாளருமான ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ ஹஸன் அலியுடன் சற்று நேரத்துக்கு  முன்னர் மேற்கொண்ட உரையாடல் ...

ஊடகவியலாளர் :- தலைவர் ஹக்கீம் நாளை ஜனாதிபதியைச் சந்திக்கிறாரா?
ஹஸன் அலி:- இல்லை
ஊடகவியலாளர்: - அமைச்சர்களைச் சந்திக்கிறார் என நினைக்கிறேன்...
ஹஸன் அலி :- ஆம் நான்கு அமைச்சர்களை தலைவர் நாளை சந்திக்கிறார்.
ஊடகவியலாளர்:- எது தொடர்பிலோ..?
ஹஸன் அலி:- அரசாங்கம் இப்போது இறங்கி வந்து விட்டது. கரையோர மாவட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். இன்றைய மன நிலையில் அதனை அரசாங்கம் தரக் கூடிய நிலைமைக்கு வந்துள்ளது.
ஊடகவியலாளர்:- அப்படிக் கிடைத்தால் அரசுக்கு ஆதரவுதானே?
ஹஸன் அலி:- முதலில் இவையெல்லாம் நடக்குமா என்று பார்க்க வேண்டுமல்லா?
ஊடகவியலாளர்:- இன்று முடிவை அறிவிப்பதாக கூறினீர்கள்தானே?
ஹஸன் அலி:- இந்தப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாகவே தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -