முஸ்லிம்கள் பிரியாணி உண்பதற்கு ஜனாதிபதி காரணம்: மேர்வின்

Share on

மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். அது மட்டுமல்லாது ஏனையோருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்கின்றனர். இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே சாரும் என மக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 14 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

'கடைகளை மூடுவதைச் சொல்வதற்கு முன்னர் 30 வருடங்களாக போக முடியாத பாதைகள், செல்ல முடியாத கோயில்கள், தேவாலயங்கள் எத்தனை இருக்கின்றன.

எனவே புத்திஜீவியான கபீர் ஹாசிம் எம்.பி. உண்மையை பேச வேண்டும். முதலில் நீங்கள் சொந்த ஊருக்கு சென்று பாருங்கள். பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. உங்கள் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். பிரியாணிகளை ஏனையோருக்கு வழங்குகின்றனர்.

இவ்வாறான நிலை மட்டக்களப்பில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்படுத்தியவர் ஜனாதிபதியே ஆவார் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :