இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. I.L.M. றிபாஸ் அவர்கள் புதிய பயிற்சி மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, அவர்களின் சேவைக் காலத்திற்கு வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. A.L. பாறூக், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி Dr. K.L.M. ரயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr. M.I.M.S. இர்ஷாத், தாதிய பரிபாலகி Mrs. G. ஜெகதீஸ்வரி, Mrs. A.G.F. ஹினாயா, தலைமை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (Chief MLT) N.L.M. தொளபீக் உள்ளிட்ட வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
புதிய பயிற்சி மருத்துவர்களுக்காக இரண்டு நாள் Orientation Programme நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியசாலைப் பிரிவுகளில் பயிற்சிக் கடமைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தரமான, பாதுகாப்பான மற்றும் மனிதநேயமிக்க சுகாதார சேவையை மக்களுக்கு வழங்கும் அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணியில் இணையும் புதிய பயிற்சி மருத்துவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
ஊடகப்பிரிவு
அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை







.jpg)



0 comments :
Post a Comment