ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு : வீடு தேடிச் சென்று கௌரவிப்பு


எம்.என்.எம். அப்ராஸ்-

ண்மையில் துருக்கிக்கு விஜயம் செய்த ஊடகக் குழுவில் இடம்பெற்றதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான விபரணக் கட்டுரைப் பிரிவில் தேசிய விருதை வென்ற ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்கள் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

பிரதேச கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் அல்-மீஸான் பௌண்டேஷனின் தவிசாளராகவும் நூருல் ஹுதா உமர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரின் ஊடகத்துறை பணிகள் மற்றும் கல்விச் சேவைகளை பாராட்டும் வகையில் கல்வி சமூகத்தினர் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று கௌரவிப்பு நிகழ்வை நடாத்தினர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதி அதிபர் எப்.எம்.ஆர். ஹாதிம், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதன்போது, ஊடகம் மற்றும் சமூக சேவைகள் ஊடாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நூருல் ஹுதா உமரின் பங்களிப்புகள் பாராட்டப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :