பொத்துவில் பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025



நூருல் ஹுதா உமர்-
ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து இளைஞர் எழுச்சி முகாம் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி அ.க. அன்வர் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

"மனோநிலை, திறன்கள், ஆளுமை, தலைமைத்துவம், தேசத்தை கட்டியெழுப்பல்" ஆகிய முக்கிய தலைப்புகளை உள்ளடக்கி, தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான குழு விளையாட்டு மற்றும் படைப்பு திறன்களை வளர்த்து அதன் மூலம் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்ற தொனிப்பொருளில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் மற்றும் அதிதிகளாக கணக்காளர் எஸ்.எப்.சப்னா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.சுபைர், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.டபிள்யூ.எஸ். கங்கா சாகரிக்கா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.எம்.சிறிவர்த்தன, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மீர் மற்றும் வளவாளர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :