சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்க வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை



றிஹ்மி ஹக்கீம்-
​கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
​இந்நிதிக் கொடுப்பனவு நேற்று (15-12-2025) சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சில் கையளிக்கப்பட்டது.

​வக்ஃப் சபையின் தலைவர் எம்.எல்.எச்.எம் ஹுசைன் அவர்கள், குறித்த நிதிக் காசோலையை சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் வக்ஃப் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :