அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின் கீழ் சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க கம்பஹா மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பண்டாரவளைப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி அம்பாறை மாவட்டத்தின் 31வது பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அம்பாறை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :