ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ,மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவைAC YMMA C ஏறாவூர் கிளை ,மற்றும் பொது சமூக சேவை அமைப்பு PSSO என்பன இணைந்த அதன் ஏற்பாட்டில் சனிக்கிழமை 18/05/2024. இன்று காலை 08/30 _பி.பகல் 04-00 மணிவரை ஏறாவூர் மட் /அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் Dr.ரேச்சல் டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் BMM.பைசல்( PHI) இரத்த வங்கி பிரிவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வழிகாட்டலில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இரத்தம் தட்டுப்பாடு காரணமாக, நோயாளர்களின் அவசர தேவை கருதி இரத்தவங்கி பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவை AC YMMA C ஏறாவூர் கிளை தலைவர் MFM.பாறூக் தலைமையில் Dr.சாபிறா வஸீம்(MOH)ஏறாவூர், SAC.நஜீமுத்தீன் சமூக சேவை உத்தியோகத்தர், ALM.பாறூக் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி பேரவைAC YMMA C மாவட்டப் பணிப்பாளர் , மௌலவி SH.சபூர்தீன் ARM.ஆதில்(PHI) மற்றும் உறுப்பிணர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment