கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்கேற்புடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த எழுத்தாளரும்,ஓய்வுபெற்ற அதிபருமான நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் நூலின் வெளியீட்டு விழா மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் பிரதம அதிதியாகவும், சிவஸ்ரீ சண்முகம் மயூரவதன குருக்கள் பிரதம குருவாகவும், களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலனசபைத் தலைவர்.கந்தவேல மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கணேஷன் மதிசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும், களுதாவளை மகா வித்தியாலய அதிபர் கணபதிப்பிள்ளை சத்தியமோகன் மற்றும் களுதாவளை வினாயகர் வித்தியாலய அதிபர் நாராயணப்பிள்ளை நடேசன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment