சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய ஐந்தாம் ஆண்டு புலமை மாணவன் நிப்லி அஹமட் க்கு கொழும்பில் கெளரவம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
சீ.ஐ.சீ.நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

சீ.ஐ.சீ.நிறுவனத்தின் தொண்டு மற்றும் நலன்புரி அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் மனிதவள முதன்மை அதிகாரி அருண ஜயசேகர, பிரதம கணக்காளர் எரந்தி விக்கிரம ஆராய்ச்சி மாணவனின் பெற்றோர்களான எம்.ஜே.எம்.சியாம், ஏ.சம்சுல் மிர்பியா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களில் ஏ சித்தி,க.பொ.த.உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு போன்ற துறைகளுக்கு தெரிவு செய்யப்படும் பிள்ளைகளுக்கு இந் நிறுவனம் கெளரவம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :