மட்டக்களப்பு , புளியந்தீவு ரிதத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20 ஆண்டு நிறைவையொட்டி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில்(25) இடம்பெற்றது.

ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் கே.ஈ.கருணாகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத் தலைவர் எஸ்.சஜிந் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமிற்கு ஆனைப்பந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலையம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி இரத்ததான முகாமில் வைத்தியர்கள், தாதி உத்தியோஸ்தர்களும், ரிதம் குழுவினரும், குருதிக் கொடையாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :