தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு அடுத்த நாளைக்கு ஒத்திவைப்பு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுக்கின்ற தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக, அடுத்த நாள் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆய்வரங்கின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட குறித்த ஆய்வரங்கு திடீரென ஏற்பட்ட ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அடுத்த நாளைக்கு (2024.03.01 ) ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருந்தபோதும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் 2024.03.01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்றும் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளிலான குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :