ஜம்பு நிலக்கடலைச் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க விவசாய உபகரணங்கள்! அரச அதிபர் சிந்தக வழங்கினார்!



வி.ரி.சகாதேவராஜா-
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் (ASMP project ) ஜம்பு நிலக்கடலை பயிர்ச்செய்கை நடவடிக்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் தெரிவு செய்யப்பட்ட 88 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் .தங்கையா கஜேந்திரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாவட்டச்செயலாளர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்..ஞானச்செல்வம் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானி ஏ.அருணந்தி நிர்வாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்..கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :