கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக ஹபீபுல்லாஹ் கடமையேற்பு.!



அஸ்லம் எஸ். மெளலானா-
ல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை. ஹபீபுல்லாஹ் அவர்கள் இன்று திங்கட்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி உட்பட பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.

இதன்போது மாநகர ஆணையாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கணக்காளரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற ஹபீபுல்லாஹ் அவர்கள் அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :