தேசிய ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் திருமலை -பொரலுகந்த ரஜமஹா விகாரையில் பொங்கல்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையில் தைப்பொங்கல் நிகழ்வு (15) இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை நிலாவெளி வீதியிலுள்ள பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி
சுகிதவங்ச திஸ்ஸ தேரர் இன ஒற்றுமையை வலுவூட்டும் விதத்தில் விகாரைக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் குறித்த விகாரையை நிர்மாணிக்கும் காலகட்டத்தில் பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் குறித்த இடத்திலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டு தற்போது பிரித் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லா மதங்களும் ஒன்றுமையையே போதிக்கின்றன. அதேபோன்று நாமும் ஐக்கியத்துடன் மற்றவர்களை மதித்து வாழ வேண்டும் என்ற நோக்குடன் பொங்கல் நிகழ்வுகளிலும் பங்கு கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :