வாழைச்சேனை அந்நூர் 98 அமைப்பினர் ஆயிஷா பாடசாலைக்கு நிதியுதவி




எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 1998 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பழைய மாணவர் அமைப்பினர் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளனர்.

பாடசாலையின் மின்சார கட்டணம் மற்றும் பல்வேறு தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய பாடசாலை நிர்வாகத்தினர் பழைய மாணவர் அமைப்பிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய அமைப்பின் உறுப்பினர்கள் புதன்கிழமை (18) நிதியினை வழங்கியுள்ளனர்.
நிதி வழங்கி வைக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன், பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், அபிவிருத்தி சங்க பொருளாளர் ஏ.எம்.அனஸ் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதியுதவி புரிந்த அந்நூர் 98 பழைய மாணவர் அமைப்பினர் ஏற்கனவே குறித்த பாடசாலைக்கு குடிநீர் வசதியினையும் பெற்றுத் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பாடசாலையின் நலன்கருதி பங்களிப்பு செய்த அமைப்பினருக்கு பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :