ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்



ஹஸ்பர்-
ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள திருகோணமலை மீடியா போரத்தின் ஊடக இல்லத்தில் இன்று (05) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் முன்னால் ஆட்சியாளர்களை பதவி விலக கோரிய ஜனநாயக போராட்டத்தில் பங்கு கொண்டவர்களை அப்பட்டமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது பெரும் விரோதமான செயலாகும் .அனைத்து பல்கலைக்கழக மாணவ தலைவர் வசந்த முதலிகே ,தேரர் உட்பட பலரின் கைதை ஏற்க முடியாது இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனநாயக குரலை நசுக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :