இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தின் கன்சல் ஜெனரல் டிபின் பி ஆர் சம்மாந்துறைக்கு விஜயம்



எம்.எம்.ஜபீர்-
ம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தின் கன்சல் ஜெனரல் டிபின் பி ஆர் சம்மாந்துறைக்கு இன்று (08) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களை பிரதேச சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பிரதேசத்தின் கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கேட்டரிந்து கொண்டதுடன், இலங்கையில் அண்மைய காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலைமையால் துன்ப சுமைகள் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமத்தப்பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடா்பாகவும் எடுத்துக் கூறப்பட்டதுடன், எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த இந்தியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் தொடர்பாக தவிசாளர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :