ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாமொன்று நடைபெறவுள்ளதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தெரிவித்தார்.

நாட்டின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது.

ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :