கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாமொன்று நடைபெறவுள்ளதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தெரிவித்தார்.
நாட்டின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது.
ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் வேண்டிக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment