வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம்.திஸ்ஸ அத்தநாயக்க



அண்மையில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில், அனைத்துக் கட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல விடயங்களை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம், அதில் முதலாவதாக, நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டை கூறினோம். என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

இதில் பல அடிப்படை விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.தற்போது அரசாங்கமும் ஜனாதிபதியும் அவசரகால சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை விதித்து அடக்குமுறைக்கு தயாராகி வருகின்றனர். எனவே அவசர நிலையை நீக்கி நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அவசர கால நிலையை பயன்படுத்தி போராட்டங்களையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தி செயற்பாட்டாளர்களை வேட்டையாட அரசு முயலக்கூடாது. மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் வழியாக இதை பார்ப்பதாக நாம் சுட்டிக்காட்டினோம். காரணம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களை பின் தொடர்ந்து வேட்டையாடும் நடவடிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்நாட்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களை கைது செய்ய வேண்டாம் என்றும், இந்நாட்டில் ஆட்சி அமைப்பு மாற்றத்தை உருவாக்கி நாட்டைக் கடும் நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடனயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கு சுட்டிக்காட்டினோம். அத்துடன், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் மறுசீரமைப்பையும் உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து, 22 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறும், அதன் மூலம் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படை அம்சங்களை மீண்டும் ஒருமுறை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள இருபத்தி இரண்டாவது திருத்தம் அரசியலமைப்பு பேரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஆட்களை தெரிவு செய்வதில் விசேட அம்சமாக, அதாவது பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினரால் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்கள் என்பது பாரபட்சமாக இருப்பதாக சுட்டிக்காட்டினோம்.
அதன்போது, ​​சமநிலையை உருவாக்க மொட்டுக்கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்த போதிலும், அதனை பரிசீலிக்க தாம் தயார் எனவும் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களின் வாழ்வை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் உதவுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.அதற்கு எம்மால் செய்யக்கூடிய பிரதான தீர்வு பாராளுமன்ற குழுக்கள் முறை ஊடாகவும் உத்தேச துறைசார் மேற்பார்வை குழு வேலைத்திட்டத்தின் ஊடாகவும் பங்களிப்பதேயாகும். ஏனெனில் எம்மால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியாது.ஆனால் இந்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான முயற்சிகளுக்கு பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக முழுமையாக பங்களிப்போம் என தெரிவித்தோம்.

இதற்கு, முன்மொழிவாகவும், உதாரணமாக பாராளுமன்றத்தில் உள்ள கோபா குழு,கோப் குழு, நிதிக் குழு, கணக்காய்வுக் குழு, பொது அலுவல்கள் குழுக்களின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதேவேளை, ஏனைய குழுக்களை உரிய அதிகாரங்களுடன் நியமித்து, எதிர்கட்சியினருக்கு அவர்களின் பிரதிநிதித்துவத்திற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும்,அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தால் நாம் அதற்கு ஆதரவளிப்போம் என தெரிவித்தோம்.
எதிர்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விசேட பணியொன்றை மேற்கொண்டு வருகின்றார், அதுவே பரோபகாரர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜைகளின் உதவியுடன் செயற்படுத்தப்படும் மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் ஆகும்.அதற்கு ஜனாதிபதி தமது உடன்பாட்டைத் தெரிவித்ததுடன்,மூச்சுத் திட்டத்தினூடாக எதிர்க்கட்சித் தலைவரின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். இதுவே எங்களின் நிலைப்பாடு.

நாடு பாரிய பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியில் உள்ளது என்று தொடர்ந்து கூறுகின்றோம்.இந்நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பில் இன்னும் நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது.

அதேநேரம், ஊழலுக்கு எதிராக ஏதாவது ஒரு வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், கொள்ளையடிக்கப்பட்ட பணம், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள், மோசடி செய்த பணம் நாட்டிற்கு திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நாட்டின் சாமானிய குடிமகன்கள் முதல் அனைவரும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.தற்போது நாட்டிற்கு அவசர கால நிலை தேவையில்லை.நாட்டிற்கு அது தேவை இல்லை, ஏனெனில் நாடு போர் அல்லது வேறு எந்த சீர்குலைவு சூழ்நிலையிலும் இல்லை. அமைதியான சுதந்திர அரசியல் போராட்டத்தை நசுக்குவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய மக்கள் கூட்டணி விளிப்பாக உள்ளது.

இதற்கு எமது ஆட்சேபனையை நாம் தொடர்ந்து தெரிவித்ததுடன், எதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என ஜனாதிபதியிடம் வினவியபோது, ​​இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.ஆனால் அவ்வாறு பொருளாதார அபிவிருத்தியை நாம் காணவில்லை.அது நடைமுறையில் நடக்கவில்லை, தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு பல்வேறு வகையான அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு அவசரகாலச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க சில சரத்துக்களில் திருத்தம் செய்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. நாட்டை கட்டுப்படுத்த முடியும் பயப்பட தேவையில்லை ஆயுதம் மற்றும் வன்முறை இல்லாத போராட்டத்திற்கு அவசரகால சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது. அவசரகால சட்டத்தை பயன்படுத்தி இந்நாட்டில் குற்றங்கள் குறையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் முதல் மூன்று கொலைகள் நடந்துள்ளன. உள்ளூர் கொலைகள், பகிரங்க துப்பாக்கிச் சூடு, பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று, நீதிமன்றத்திற்குச் உள்ளே ஒரு கொலை செய்து, இந்நாட்டில் சட்டத்தின் அமுலாக்கம் எங்கே சீர்குலைந்துள்ளது.அவசரகாலச் சட்டத்தை கையாண்டாலும் இதுவரை இருபத்தி மூன்று கொலைகள் பதிவாகியுள்ளன.இது மிகவும் மோசமானது.அதுமட்டுமின்றி குற்றச்செயல்கள் அதிகளவில் அதிகரித்துள்ளன.இந்த அதிகரிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதை பிரதானமாக பாதிக்கும் விடயமாகும்.அது பாதுகாப்பிற்கு ஒரு காரணம் என்று வாதிடப்படுகிறது, எனவே பாதுகாப்புத்துறை மற்றும் பிற பாதுகாப்பு படைகள் அத்தகைய சட்டங்களை செயல்படுத்தக்கூடாது.மக்களை கட்டுப்படுத்தவும், அரசியல் சக்திகளை கட்டுப்படுத்தவும், தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவசர சட்டம் தெளிவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை பேராசிரியர் நெரஞ்சன் விஜேவர்தன கூறுகையில், இந்த குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையின் செயல்பாடு பெரும் சரிவை சந்தித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்தன என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டில் நாளுக்கு நாள் நடக்கும் இந்தச் செயற்பாட்டினால் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு இன்று சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் நாம் செல்வாக்குச் செலுத்தியுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவின் பாதுகாப்புப் பிரிவின் ஆய்வுக் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அரசியலை பொருட்படுத்தாமல், இது போன்ற ஒரு கடும் சவாலான சூழ்நிலையில் அரசியல் செய்வது மிகுந்த அவதானத்துக்குரியதாகும்.

இதை புரிந்து கொள்ள முடியாத அரசு, எந்த வித மதிப்பீடும் இன்றி அனுமதித்து, தற்போது இரத்து செய்யப்படுகிறது.சீனாவின் செல்வாக்கு, அதன் வழியாக நுழைய அனுமதித்தால், இந்தியாவில் இருந்து வரும் தாக்கம், நம்மை எப்படி பாதிக்கும்?இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. அதே நேரத்தில், நாங்கள் இந்தியாவை கோபப்படுத்தினால் அது ஆபத்து, சீனாவை கோபப்படுத்துவது சாத்தியமில்லை,அத்தகைய சூழ்நிலையில், முறையான இராஜதந்திர நடைமுறைகளால், நாடு மிகப்பெரிய சர்வதேச மோதலை எதிர்கொள்கிறது.எங்களுக்குள்ள அச்சுறுத்தல் தீவிரமானது. நாம் ஒரு சிறிய நாடு மட்டுமல்ல, தற்போதைய சவால்களை எதிர்கொண்டு இந்த சவால்களை நாம் எவ்வாறு சமாளிப்பது என்பது முக்கியம்.இதற்கு முக்கிய காரணம், வெளியுறவுக் கொள்கையில் சமநிலை இல்லாததே.சமச்சீரான வெளியுறவுக் கொள்கை இருந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது, இந்தியாவுடன் பேசி, பிரச்சினையை தீர்க்காவிட்டால் பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்கும்.
நாட்டின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது.ஒவ்வொரு நாளும் 777 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஒரு தகவல் உள்ளது.அது சுற்றுலாப்பயணிகள் அல்ல.வறுமை,வருமானமின்மை,

வேலையின்மை,நாட்டின் பாதுகாப்பின் சரிவு போன்ற காரணங்களால் வெளியாட்டிற்கு செல்கின்றனர்.எனவே பல இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொரு நாளும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அதாவது ஒரு மணி நேரத்திற்கு முப்பது பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.நாடு ஏன் இப்படி செல்கிறது?வாழ்வாதார மூலம், ஆதாரங்கள் அடிப்படைப் பிரச்சினை.அதே சமயம் நாட்டின் பாதுகாப்பு நிலைமையில் இலங்கையர்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையை நாடு எட்டியுள்ளது.இதனாலேயே நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டம் இல்லாமல் போக முடியாது.வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்திற்கு குறைகிறது, நாங்கள் பெறும் இருப்பு அறிக்கைகளைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இப்போதாவது கூட தேசிய வேலைத்திட்டத்தை நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் முன்னெடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

அதனால்தான் ஜனாதிபதியிடம் நாங்கள் கூறினோம். எதிர்கட்சியாக நாடு.மக்கள் மீண்டும் எழுச்சி பெற்று நாடு பொருளாதார ரீதியில் பலமடைவதை காண விரும்புகின்றோம்.தேசிய வேலைத்திட்டத்தை கட்டியெழுப்பும் அனைத்து கட்சி வேலைத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியுமே தவிர கட்சிகளை பிளவுபடுத்தி செய்யும் திட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஈடுபடாது என்பதை போறுப்புடன் கூறுவது சிறந்தது.

தனியார் பொது முதலீடுகளை இணைத்து கூட்டுறவுத் தொழில்களை உருவாக்கப் போவதாக அரசு பெரும் பிரசாரம் செய்து வருகிறது. இரயில்வே திணைக்களம் தொடர்பாக வாரத்தின் முதல் நாள் அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.அதாவது அரசாங்கமும் புகையிரத திணைக்களமும் பௌதீக வளங்களை விற்பனை செய்ய முன்வருகின்றன.எடுக்க வேண்டுமாயின் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.இல்லையெனில் ஒவ்வொருவருக்கும் விற்க வேண்டும் என்ற கோஷமாக மாற்றுவது பாரிய தவறு.இந்த அமைச்சரவை பத்திரங்களில் ரயில்வே திணைக்களத்தின் சகல பௌதீக வளங்களையும் உள்ளடக்கி அயோக்கியர்களுக்கு விற்று ஒத்துழைப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக என தற்போது அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.அரசாங்க திறைசேரி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது நிறுவனங்களை அதிக செலவில் தனியார் பொது ஒத்துழைப்பு வணிகங்களாக மாற்ற முயற்சிக்கிறது.திறைசேரிக்கு சுமை என்று காட்டி கொள்ளையடித்து தனியாரிடம் விற்றால் அது முழு தவறு.தனியார் பொது ஒத்துழைப்பு தொழில் செய்வதை ஐக்கிய மக்கள் கூட்டணி சற்றும் எதிர்க்கவில்லை.ஆனால் இவற்றை கொள்ளையடிப்பவர்களுக்கும் விற்கும்

முயற்சி கள் நடந்தால், நாங்கள் அதற்கு எதிராக முன் நிற்போம் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :